Tuesday, June 11, 2024
Home » குடும்ப தகராறில் விபரீத முடிவு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

குடும்ப தகராறில் விபரீத முடிவு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

by Lakshmipathi

*காதல் கணவன் கைது

திருமலை : ஐதராபாத்தில் குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து காதல் கணவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.தெலங்கானா மாநிலம் கொத்தகூடம் மாவட்டம் சுஜாதாநகர் மண்டலம் கோப தாண்டாவை சேர்ந்தவர் ரமணா(28). இவரும் கம்மம் மாவட்டம், எருபாலம் பகுதியை சேர்ந்த பானோத்து சந்தனா(25) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் இருவரும் பஞ்சாரா ஹில்ஸ் இந்திரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வசிக்க தொடங்கினர். இதில் ரமணா, திரைப்பட தயாரிப்பாளர் பண்ல கணேஷின் ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். சந்தனா நகைக்கடையில் வேலை செய்து வந்தார்.கடந்த 7ம் தேதி இரவு வீட்டில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது தோசைக்கு சட்னி அதிகம் போட்டதாக கூறி ரமணா தனது மனைவி சந்தனாவிடம் சத்தம் போட்டு கண்டித்துள்ளார்.

பின்னர் நேற்று முன்தினம் வழக்கம்போல் இருவரும் வேலைக்குச் சென்றனர். ​இருப்பினும் கணவரிடம் மன்னிப்பு கேட்க சந்தனா பலமுறை வீடியோ கால் செய்துளளார். ஆனால் ரமணா போன் எடுக்கவில்லை. இதனால் போன் செய்த சந்தனா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ‘நான் சாகப்போகிறேன்’ என்று கூறி போனை துண்டித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த ரமணா, வீட்டின் உரிமையாளருக்கு போன் செய்து, சீக்கிரம் தனது வீட்டிற்கு செல்லும்படி கூறியுள்ளார். அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சந்தனா தூக்கிட்டு தற்கொலை செய்து இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக ரமணாவுக்கு தெரிவித்தனர்.
சந்தனாவின் குடும்பத்தினர் புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் ரமணாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

fourteen − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi