புதுடெல்லி: டெல்லியில் இணையதள செய்தி நிறுவனமான நியூஸ் கிளிக் சீனாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக கூறி நியூஸ் கிளிக் நிறுவனர் மற்றும் தலைமை அதிகாரி கைது செய்யப்பட்டனர். நியூஷ் கிளிக்கிற்கு எதிராக தீவிரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நியூஸ் கிளிக் தனது எக்ஸ் பதிவில், ‘சீனா அல்லது சீன நிறுவனங்களிடம் இருந்து நியூஸ் கிளிக் எந்த நிதியுதவி மற்றும் அறிவுறுத்தல்களையும் பெறவில்லை. டெல்லி போலீசின் எப்ஐஆரில் கூறப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுக்களை ஏற்கமுடியாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.