தஞ்சாவூரில் தி.க. தலைவர் கி.வீரமணி நேற்று அளித்த பேட்டி: தேர்தல் ஆணையர் தனது பதவியை ராஜினாமா செய்தற்கான காரணம் போக போக தெரியும். தேர்தல் பத்திரத்தில் எப்படி மோடி அரசு செய்ததோ, அதேபோல் தேர்தல் ஆணையர் விஷயத்திலும் செய்து இருக்கிறார்கள். இது ஒரு மர்ம கதையாக இருக்கிறது. சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைத்திருப்பதை தமிழக பெண்கள் ஏமாற மாட்டார்கள்.
திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு என்பது ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு முடிவு. தேர்தல் கூட்டணிக்கு பாஜ கதவு திறந்து இருக்கிறது என்றார்கள். கதவு திறந்தாலும், ஜன்னல் திறந்தாலும் கதவையே கழட்டி வைத்தாலும் கட்டிடத்தையே திறந்து வைத்தாலும் அவர்களை சீண்டுவதற்கு ஆட்கள் கிடையாது. மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார்.
தமிழகத்தை பொறுத்தவரை மட்டுமல்ல இந்தியாவை பொறுத்தவரை பாஜ தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறது. கூட்டணியே இல்லாதபோது 370 இடங்களில் வெற்றி, 377 இடங்களில் வெற்றி என கூறியிருக்கிறார்கள். இவ்வளவு சீட்டு வெற்றி பெறும் என்ற நிலையில் மற்ற கட்சிகளை அழைக்க வேண்டிய அவசியம் என்ன? கதவு திறந்து இருக்க வேண்டிய அவசியம் என்ன?. மோடி மணிப்பூருக்கு செல்ல தயாராக இல்லை, ஆனால் யானை மீது சவாரி செய்ய தயாராக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.