Thursday, May 16, 2024
Home » போடி விரிவாக்க சாலையில் சாலை நடுவே உள்ள மின்கம்பங்களை மாற்றியமைப்பது எப்போது?.. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

போடி விரிவாக்க சாலையில் சாலை நடுவே உள்ள மின்கம்பங்களை மாற்றியமைப்பது எப்போது?.. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

by Neethimaan


போடி: போடியிலிருந்து உத்தமபாளையம் செல்லும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், சாலையின் நடுவே உள்ள மின்கம்பங்கள் எப்போது சாலையோரத்தில் மாற்றி அமைக்கப்படும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர். போடி-உத்தமபாளையம் மாநில நெடுஞ்சாலை 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. போடி-தேவாரம், தேவாரம்-உத்தமபாளையம் சாலைகள் நெஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. துவக்கத்தில் இந்த சாலை 3.75 மீட்டர் குறுகிய சாலையாக இருந்தது. இந்த நிலையில் மக்கள் தொகையும், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்துகளும் ஏற்பட்டன. இதையடுத்து இந்த சாலையை 10 மீ அகலம் கொண்ட சாலையாக மாற்றி அமைக்கப்பட்டது.

இதற்கிடையில் போக்குவரத்தை மேலும் எளிமைப்படுத்துவதற்காக போடி பஸ் நிலையம் பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் போடி மேல சொக்கநாதாபுரம் பிரிவு அரசு பொறியியல் கல்லூரி வரையில் மேலும் 6 மீட்டர் விரிவாக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் சாலை இருபுறங்களிலும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அகன்ற ஆழமான உயர்ந்த வாறுகால் அமைத்து கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்வதற்கு ஏதுவாக கால்வாய் சீரமைக்கப்பட்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கரட்டுப்பட்டி பிரிவிலிருந்து அரசு பொறியியல் கல்லூரி வ ரையில் அகன்ற புலியூத்து கால் வாயில் மூன்று மீட்டர் வரை நீண்ட தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்து 16 முதல் 18 மீட்டர் அளவு அகலம் கொண்ட சாலையில் வாகனங்கள் குறுக்கே கடக்க கூடாது என்பதற்காகவும், பாதசாரிகளும் ஆங்காங்கே முறையில்லாமல் நடந்து செல்லக் கூடாது என்பதற்காகவும் 1400 மீட்டர் அளவு சாலை நடுவே தடுப்பு சுவர் எழுப்பி பாதுகாப்பு படுத்தப்பட்டுள்ளது . பணிகள் நிறைவேற்றப்பட்ட நிலையில் 2 கி.மீ. தொலைவில் இருந்த இடையூறாக இருந்த 15க்கும் மேற்பட்ட மரங்களை வேரோடு எடுத்து புலியூத்து கால்வாய் பகுதிகளில் நட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், 25க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாலை நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன. இந்த மின் கம்பங்கள் விரைவில் அகற்றப்பட்டால் போக்குவரத்து தடையில்லாமல் இருக்கும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

You may also like

Leave a Comment

2 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi