திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை மனநலம் சிகிச்சை பிரிவு, வெளி நோயாளிகள் அறை வாசலில் கடந்த 27ம் தேதி மாலை 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக, மருத்துவ அலுவலர் செந்தில்குமார் மோகன் அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் அருள்ஜோதி விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.