திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மாவட்டந்தோறும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கொரோனாவாக இருந்தாலும் வரலாறு காணாத புயல் வெள்ளமாக இருந்தாலும் மக்கள் வாழ்வாதாரத்துக்காக திட்டங்கள் தீட்டுவதுதான் திமுக அரசு என்று முதல்வர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் நீர்நிலைகளில் ஏற்பட்ட 288 உடைப்புகள் உடனே சரிசெய்யப்பட்டன. ரூ.66 கோடி மதிப்பீட்டில் போர்க்கால அடிப்படையில் 288 நீர்நிலைகளில் ஏற்பட்ட உடைப்புகளை உடனே சரிசெய்தோம்