கிருஷ்ணகிரி, ஜூன் 29: கிருஷ்ணகிரியில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட திட்டக்குழு தலைவரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான மணிமேகலை நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட திட்டக்குழு துணை தலைவரும், கலெக்டருமான சரயு, எம்எல்ஏ.,க்கள் பிரகாஷ், மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திட்டக்குழு அலுவலர் சாந்தா வரவேற்றார். மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் கதிரவன், சங்கர், மம்தா, அனிதா, பூதாட்டியப்பா, வெங்கடாசலம்(எ)பாபு, சசிகலா, பழனி, வித்யா, சீனிவாசலு, சுனில்குமார், மணிவண்ணன் ஆகியோர் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து மாவட்ட திட்டக்குழுமம் குறித்து குறும்படம் காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பூபதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ராஜகோபால், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரச்சன்ன பாலமுருகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், மாவட்ட ஊராட்சி செயலாளர் சாந்தா, கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவர் பரிதா நவாப், ஒன்றிய குழு தலைவர்கள் சீனிவாசலு ரெட்டி, உஷா குமரேசன், சசி வெங்கடசாமி, கேசவமூர்த்தி, நகர்மன்ற துணை தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, நவாப், மீன் ஜெயக்குமார், பாலாஜி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பிடிஓ முருகன் நன்றி கூறினார்.