தருமபுரி : தருமபுரி மாவட்டம் பூதிநத்தம் கிராமத்தில் நடந்து வரும் அகழாய்வில் புதிய கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 22 செ.மீ. நீளமும் 7.74 செ.மீ. அகலமும் அதிகபட்ச தடிமன் 4.7 செ.மீ. கொண்ட புதிய கற்கால கருவிகள் கண்டெடுத்துள்ளனர். புதிய கற்காலத்தில் நிலத்தை உழுவ ஏர்கழப்பையாகவும் வெட்டுவதற்கு கோடாரியாகவும் பயன்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.