கும்பகோணம், ஜூலை 25: தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக மகளிரணி மற்றும் தொண்டரணி சார்பில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுபா திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மகளிரணி தலைவர் ஜெயந்தி, தொண்டரணி தலைவர் கண்ணகி, மகளிரணி துணைத்தலைவர் கலா, தொண்டரணி துணைத்தலைவர் சுசீலா, மகளிரணி தொண்டரணி வலைதள பொறுப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் சுமதி, சுடர்விழி, கமலா, கீதா, சுமதி, சத்யபிரியா, ஜெயசித்ரா, ராதா, திவ்யா, அமராவதி, சுஜாதா, ராதிகா, லதா மற்றும் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கும்பகோணம் மாநகரம், மேற்கு, கிழக்கு ஒன்றியங்கள், திருவிடைமருதூர் மற்றும் பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுமார் 1500க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகள் மற்றும் பெண் தொண்டர்கள் பங்கேற்று, கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.