டெல்லி: யமுனையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்காமல் இருக்க குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் அனுப்பியுள்ளார். டெல்லியின் ஹத்தினிகுண்ட் தடுப்பணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறக்க வேண்டும் என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் யமுனை நதியின் நீர்மட்டம் 207.71 மீட்டரை எட்டியுள்ளது. இதுவே இதுவரை இல்லாத அளவாக உள்ளது. டெல்லியில் கடந்த 2-3 நாட்களாக மழை பெய்யவில்லை. ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கும் கடிதம் எழுதி, டெல்லிக்கு வரும் நீரின் அளவை குறைக்க வேண்டும், அப்போது தான் யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை தடுக்க முடியும், தாழ்வான பகுதிகளில் உள்ள அனைவரும் வீடுகளை காலி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
யமுனை ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் யமுனையின் நீர்மட்டம் இன்று மதியம் 1 மணியளவில் 207.55 மீட்டரை எட்டியுள்ளது. இது அபாயக் குறியை (205.33 மீ) விட அதிகமாக உள்ளது. இதற்கு முன், யமுனையின் அதிகபட்ச மட்டமான 1978 ஆம் ஆண்டு 207.49 மீட்டராக இருந்தது. அப்போது டெல்லியில் வெள்ளம் ஏற்பட்டு நிலைமை மிகவும் மோசமாகியது. தற்போது 207.55 மீட்டர் உயரத்தில் யமுனை எப்போது வேண்டுமானாலும் வெள்ளம் வரலாம்.
தற்போது வந்துள்ள மத்திய நீர் ஆணையத்தின் மதிப்பீட்டின்படி, இன்று இரவு யமுனையின் நீர்மட்டம் 207.72 மீட்டரை எட்டும் என்பது மிகுந்த கவலையளிக்கிறது. டெல்லியில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்யவில்லை. டெல்லியில் பெய்து வரும் மழையால் டெல்லி யமுனையில் நீர் மட்டம் அதிகரிக்காமல், ஹரியானாவில் அமைந்துள்ள ஹதினிகுண்ட் தடுப்பணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. டெல்லியில் யமுனையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்காமல் இருக்க, முடிந்தால் ஹத்தினிகுண்ட் தடுப்பணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
டெல்லி நாட்டின் தலைநகரம். மேலும் சில வாரங்களில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. தேசியத் தலைநகரில் ஏற்பட்ட வெள்ளச் செய்தி உலகிற்கு நல்ல செய்தியை அனுப்பாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து டெல்லி மக்களை இந்த நிலையில் இருந்து காப்பாற்ற வேண்டும்.