டெல்லி: டெல்லி திகார் சிறையில் 80க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியிட மாற்றம் செய்து சிறை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 5 டிஎஸ்பி, 9 ஏஎஸ்பி, 8 தலைமை வார்டன்கள், 50 வார்டன்கள் உட்பட 80 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்துள்ளனர். திகார் சிறையில் பிரபல ரவுடி தில்லு படுகொலையை அடுத்து சிறை நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.