சென்னை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: கேரளாவில் 280 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து, நமது பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் கேரள மாநிலத்தின் பொது சுகாதாரத் துறை அலுவலர்களோடு பேசியுள்ளார். காய்ச்சல் பாதிப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த 4 மாதங்களாக குறைந்த அளவிலேயே இப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு செல்பவர்கள் அனைவரும் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.