டெல்லி: ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் நாளை போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும். காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1823 கோடி வரி நிலுவை உள்ளதாக வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீசை கண்டித்து போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.