பெங்களூரு: பெங்களூரு வீரபத்ர நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்துகள் தீப்பிடித்து எரிந்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு வீரபத்ரா நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பஸ் டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் தீயினால் எரிந்து நாசமாகின.
பெங்களூரு வீரபத்ரநகர் பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேருந்துகள் தீயில் கருகின. இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். தீ விபத்துக்கான காரணமும் இன்னும் கண்டறியப்படவில்லை.
பெங்களூரு வீரபத்ரா நகரில் உள்ள கேரேஜ் அருகே உள்ள பஸ் டிப்போவில் ஏற்பட்ட தீ விபத்தில் அப்பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டது. டிப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் ஐந்து முதல் பத்து தனியார் பேருந்துகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், இரண்டு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தீயை அணைப்பதற்கும் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தீயினால் ஏற்பட்ட புகையால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காட்சியளிக்கிறது.