சென்னை: மாநகர பேருந்துகளில் பயணி ஒருவர் 5 கிலோ எடை வரையிலான பொருட்களை கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. 5 முதல் 20 கிலோ வரை எடையுள்ள பொருட்களுக்கு சுமை கட்டணமாக ரூ.10 அல்லது ஒரு பயணிக்கான கட்டணம் வசூலிக்க. அதிக இடத்தை ஆக்கிரமித்து மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பெரிய சுமைகளை ஏற்ற அனுமதிக்க கூடாது. பயணிகள் இல்லாத சுமைகளை மாநகர பேருந்தில் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என்று போக்குவரத்துத் துறை கூறியுள்ளது.