சிட்ரான் நிறுவனம் பசால்ட் என்ற எஸ்யுவி கூபேயை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. பளீச் நிறத்தில், பார்ப்பவர்களை கவரும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது கார் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் இந்த ஆண்டு பிற்பாதியில் விற்பனைக்கு வரும் என நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. முதலில் இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா சந்தையில்தான் விற்பனைக்கு வர உள்ளது. இந்த காரில் இடம் பெற உள்ள இன்ஜின் திறன் குறித்த தகவல்களை நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும், சி3 மற்றும் சி3 ஏர் கிராஸ் வரிசையில் நிறுவனத்தின் சி-கியூப் திட்டத்தின் கீழ் இது உருவாக்கப்படுவதால் சி3 ஏர் கிராசில் உள்ள 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ சார்ஜ்டு இன்ஜின் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 205 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.