ஆவடி: ஆவடி மாநகராட்சி பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் விளையாட்டு பூங்காவை ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ திறந்து வைத்தார். ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 40வது வார்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நீண்ட நாட்களாக அப்பகுதியில் குப்பைகளை கொட்டி துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் பூங்கா அமைக்க வேண்டும் என்று ஆவடி சட்டமன்ற உறுப்பினர் இடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசர் நாசரேத்து கல்வி குழுமத்தின் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் விளையாட்டு பூங்கா கட்டப்பட்டது.
அந்த சிறுவர் பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்காக ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் உதயகுமார், நாசரேத்து கல்வி குழுமத்தின் தலைவர் ஹென்றி மாரிஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் ரமேஷ், மாநகர பொறுப்பாளர் சண்பிரகாஷ், மண்டலக்குழ தலைவர் ராஜேந்திரன், கேட்டரிங் சுரேஷ், மாமன்ற உறுப்பினர்கள் சத்யா கோ ரவி, யுவராஜ், வட்ட செயலாளர்கள் விஜயன், இளங்கோ, சோழகண்ணன், வழக்கறிஞர் அணி வினோத், பாலாஜி மற்றும் பகுதி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.