Sunday, June 16, 2024
Home » முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தாய் மனம் கொண்டவர் என வாழ்க! வாழ்க! என வாழ்த்துகிறது மகளிர் சமுதாயம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தாய் மனம் கொண்டவர் என வாழ்க! வாழ்க! என வாழ்த்துகிறது மகளிர் சமுதாயம்

by Arun Kumar

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவுத் திட்டத்தை 15-9-2022 அன்று அறிமுகப்படுத்தினார். அத்திட்டத்தின் மூலம் 31,000 அரசுப் பள்ளிகளில் 17 இலட்சம் குழந்தைகள் காலை உணவைப் பசியாற உண்டு, பள்ளிகளில் படிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.இதனால், முதலமைச்சர் அவர்களைத் “தாயுமானவர்” என்று தமிழ்நாட்டு மக்கள் போற்றுகின்றனர்.

தாய் மனம் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் தாய்க்குலம் பெருமை கொள்ளும் வகையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப் படுத்துகிறார்கள். பெண்கள், பிறந்தது முதல் தந்தையையும், திருமணம் ஆனபின் கணவனையும், பின்னர் மகன் அல்லது மகளையும் சார்ந்து வாழ வேண்டியவர்களாக உள்ளனர்.

பெண்கள் யாருடைய கையையும் எதிர்பாராமல் வேலை வாய்ப்புப் பெற்று வருமானம் ஈட்டக் கூடியவர்களாகத் திகழ்ந்து தற்சார்புநிலை அடைய வேண்டும் என்பதற்காக. 1989 ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அரசுப் பணிகளில் மகளிர்க்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கினார்கள். அதனால், இலட்சக் கணக்கான மகளிர் அரசுத் துறைகளில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுப் பொருளாதாரத்தில் தற்சார்புநிலை அடைந்து வாழ்வில் உயர்ந்துள்ளனர்.

அதே 1989ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட மகளிர் திட்டத்தில் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு கிராமப்புற மகளிர் பொருளாதாரத்தில் உயர்ந்திட வழிவகுக்கப்பட்டது.
இத்திட்டங்களுடன் சமசொத்துரிமைச் சட்டம், சுய வேலைவாய்ப்புத் திட்டம் போன்றவைகளால் பெண்கள் சமுதாயம் எழுச்சி பெற்று வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2021-இல் பொறுப் பேற்றது முதல் மகளிர் சமுதாய முன்னேற்றத்தில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருமானம் இன்றிச் சிரமப்படும் ஏழை மகளிரின் துயர் துடைத்திட அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி -கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, 1 கோடியே 16 லட்சம் மகளிர்க்கு மாதம்தோறும் 1,000 ரூபாயை, இது உதவித் தொகை அல்ல; உரிமைத் தொகை என வழங்குகிறார்கள். மகளிர் சமுதாயத்தை மனம் குளிரச் செய்துள்ள இந்த மாபெரும் திட்டத்தை கர்நாடக மாநில அரசு செயல்படுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைப் பாராட்டியது.

அத்துடன், அரசுப் பள்ளிகளில் படித்துக் கல்லூரியில் சேரும் மகளிர்க்குப் “புதுமைப் பெண்” திட்டத்தை நடைமுறைப்படுத்தி 4,81,705 கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கி, மகளிர் இடையே தன்னம்பிக்கை உணர்வை முதல்வர் ஊட்டியுள்ளார். விடியல் பயணம்” மூலம் மகளிர்க்குக் கட்டணம் இல்லாப் பேருந்துப் பயணத் திட்டம் தந்து ஒவ்வொரு பெண்ணும் மாதம் ரூ.888/- வரை சேமிக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளார்கள். இதுவரை இத்திட்டத்தில் மகளிர் 445 கோடி முறை பயணம் செய்து பயனடைந்துள்ளனர்.

முதலமைச்சர் பல்வேறு திருமண நிதி உதவித் திட்டங்களின்கீழ் 1,01,712 மகளிர்க்கு ரூ.827 கோடி நிதியுதவி வழங்கி உள்ளார்கள். முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராகத் திகழ்ந்தபோது தமிழ்நாடு முழுவதிலும் மகளிர் சுய உதவிக் குழு மகளிர்க்கு மணிக்கணக்கில் நின்றபடியே கடனுதவி வழங்கி, அவர்களின் முகம் மலரச் செய்தவர் அவர்கள் வாழ்வில் வளம்பெருகச் செய்தவர். அந்த மகளிர் சுய உதவிக் குழு மகளிர் நலன் மேம்பட 2021-இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் 12 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடனுதவி வழங்கி, மகளிர் இடையே தன்னம்பிக்கை உணர்வை வளர்த்துள்ளார்.

அத்துடன் பணிபுரியும் மகளிர் ஆங்காங்கே எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளை அகற்றி, அவர்களுக்கிடையே பாதுகாப்பு உணர்வை வளர்த்திட மாநிலம் முழுவதும் 97 கோடி ரூபாயில் 16 பணி புரியும் மகளிர் விடுதிகளை அமைத்திடவும் உத்தரவிட்டுள்ளார்கள். முக்கிய விருந்தினர்கள் வரும் வழிகளில் காவல்துறையில் பணியாற்றும் மகளிரைப் பாதுகாப்பிற்காக நெடுநேரம் நிறுத்துவது கூடாது என ஆணையிட்டு, அவர்களை இலகுவான பணிகளில் ஈடுபடுத்தியவர் முதலமைச்சர் அவர்கள்.

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளில் ரூபாய் 218 கோடியே 88 இலட்சம் பெண் குழந்தைகள் பயனடையச் செய்துள்ளார் நம் முதலமைச்சர் அவர்கள். இப்படி, தாய் மனம் கொண்ட நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மகளிர் சமுதாயத்தினைக்காப்பதற்காகச் செயல்படுத்தியுள்ள பல்வேறு திட்டங்களால் பயனடையும் மகளிர் சமுதாயம் இன்று முதலமைச்சர் அவர்களை வாழ்க வாழ்க, பல்லாண்டு வாழ்க என வாழ்த்திக் கொண்டுள்ளது.

You may also like

Leave a Comment

thirteen − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi