Sunday, May 12, 2024
Home » ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மானிய தொகைக்கான காசோலைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மானிய தொகைக்கான காசோலைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Arun Kumar

சென்னை: ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மானிய தொகைக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 3,987 பயனாளிகளுக்கு தலா ரூ.25,070 விதம் ஹஜ் மானிய தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மானிய தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 3,987 பேருக்கு மானிய தொகையை வழங்குவதை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, ஹஜ் பயணிகள் 5 பேருக்கு தலா ரூ.25,070 தொகைக்கான காசோலையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 3,987 பேருக்கு தலா ரூ.25,070 தொகைக்கான காசோலை வழங்கப்படுகிறது. முதல் முறையாக ஹஜ் யாத்திரை செல்வோருக்கு தமிழக அரசு மானிய தொகை வழங்குகிறது. தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதலமைச்சருடன், அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழக அரசின் தலைமை செயலாளர் உள்ளிட்ட துறை சார்ந்த உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

two + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi