சென்னை: கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு ஒன்றிய அரசை வற்புறுத்த முதலமைச்சர் முன்வர வேண்டும் என்று பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிட உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழர் பண்பாட்டுத் தொன்மையை உலகறிய கொண்டு செல்வோம் என்று அமெரிக்கவாழ் தமிழர் மாநாட்டுக்கு முதலமைச்சர் வாழ்த்து அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டிருப்பதை வரவேற்று பாராட்டுகிறேன் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.