சென்னை: சாகித்ய விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர்கள் உதயசங்கர், ராம் தங்கத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உதயசங்கர், ராம் தங்கத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் எனது மனமார்ந்த பாராட்டுகள். நம் வரலாற்றின் வேர்களை இளையோர் அறிய ஆதனின் பொம்மை என்ற நாவலை எழுதியுள்ளார் உதயசங்கர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.