கேரளா: கேரளா படகு விபத்தில் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். படகு விபத்து நடந்த இடத்தில் நேரில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு செய்தார். படகு விபத்து தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளார். உயிருடன் மீட்கப்பட்டவர்களின் முழு மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்று கேரளா முதல்வர் கூறியுள்ளார்.