Monday, May 6, 2024
Home » திருநெல்வேலி மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

by Arun Kumar

 

திருநெல்வேலி மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சக்தி. ரயில்வே தபால் சேவை நிறுவனத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நெல்லை மாவட்டம் திருவேங்கடநாதபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்துள்ளார். அப்போது இவருடன் நண்பர்களான சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஸ்ரீராம், ஆட்டோ ஓட்டுநர்களான அருண், வினோத் ஆகியோரும் வந்துள்ளனர்.

இந்த நிலையில் நண்பர்கள் அனைவரும் திருவேங்கடநாதபுரம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர், அங்கு அவர்கள் குளித்து கொண்டிருக்கும் போது திடீரென ஸ்ரீராம் மற்றும் அருண் ஆகியோர் நீரில் மூழ்கியுள்ளனர். இதனை அறிந்த மற்ற நண்பர்களும் அப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்தவர்களும் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் அதற்குள் அவர்கள் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். நீண்ட நேரம் தேடியும் கிடைக்காத நிலையில் பேட்டை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுத்தமல்லி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த பேட்டை தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தாமிரபரணி ஆற்றில் தேடுதல் பணியை தொடர்ந்தனர். தேடுதலுக்கு பின் உயிரிழந்த நிலையில் அருண்குமார் மற்றும் ஸ்ரீராம் ஆகிய இருவரின் உடல்களும் மீட்கப்பட்டது.

அதனை தொடர்ந்து உடற்கூறு ஆய்வுக்காக இருவரின் உடலும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சுத்தமல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் இருந்து நெல்லை வந்து தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், கீழத்திருவேங்கடநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரது வீட்டிற்கு சென்றிருந்த சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம், த/பெ.பாலகிருஷ்ணன் (வயது 25) மற்றும் அருண்குமார், த/பெ.ஆறுமுகம் (வயது 23) ஆகியோர் நண்பர்களுடன் நேற்று (8.5.2023) மதியம் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

1 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi