Thursday, May 9, 2024
Home » சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு!

சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு!

by Neethimaan

சென்னை: சென்னை புறநகரில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டண உயர்வு விவரத்தை நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டது. பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பரனூரில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ரூ.5 முதல் 10 வரை உயர்ந்துள்ளது. ஒரு மாதத்தில் 50 ஒற்றை பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் ரூ.45 முதல் 200 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

உள்ளூர் தனியார் வாகனங்களுக்கு மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.10 வரை உயர்ந்துள்ளது. ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயண கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் தனியார் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் 50 ஒற்றை பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.60 முதல் ரூ.190 வரை உயர்ந்துள்ளது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1 முதல் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியுள்ள சுங்கக் கட்டணம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

You may also like

Leave a Comment

twelve + 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi