சென்னை: சென்னையில் குழந்தையின் கை அகற்றும் அறுவை சிகிச்சை குறித்த விவகாரத்தில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பொதுமருத்துவத்துறை உள்ளிட்ட 3 மருத்துவர்கள் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மருத்துவமனை டீன் தகவல் தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தை தலையில் ரத்தக்கசிவு பிரச்னைக்கு அனுமதித்துள்ளனர். குழந்தையின் கையில் ட்ரிப்ஸ் போட்டதில் ஏற்பட்ட குறைபாட்டால் கை அழுகியதாக பெற்றோர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். குறை பிரசவத்தில் பிறந்ததால் குழ்ந்தைக்கு தலையில் ரத்தக் கசிவு உள்ளிட்ட பல பிரச்னைகள் உள்ளன என்று டீன் தெரிவித்துள்ளார்.