Saturday, July 27, 2024
Home » நேரம் கேட்பது போல் நடித்து டீ மாஸ்டரிடம் செல்போன், ரூ8000 பறிப்பு

நேரம் கேட்பது போல் நடித்து டீ மாஸ்டரிடம் செல்போன், ரூ8000 பறிப்பு

by Neethimaan


ஆவடி: ஆவடியில் அதிகாலையில் டீ மாஸ்டரிடம் நேரம் கேட்பது போல் நடித்து அவர் வைத்திருந்த செல்போன், ரூ8000 பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். ஆவடி அடுத்த பட்டாபிராம், மாடர்ன் சிட்டி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி(61). அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், இந்து கல்லூரி அருகே டீ மாஸ்டராக பணி புரிந்து வருகிறார். நேற்று முன்தினம் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்று, நேற்று அதிகாலை அவர் வேலை செய்யும் டீக்கடைக்கு வந்துள்ளார்.

அப்போது, மர்ம நபர்கள் 2 பேர் நேரம் கேட்பது போல் அவரிடம் சென்று, அவர் வைத்திருந்த உயர்ரக செல்போன் மற்றும் ₹8000 பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடிவிட்டனர். இது குறித்து கந்தசாமி பட்டாபிராம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

You may also like

Leave a Comment

eight + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi