வெள்ளிச்சந்தையில் விபத்தில் சிக்கிய அரசு பஸ் டிரைவர் பலி
குளச்சல்,நவ.15 : வெள்ளிச்சந்தை அருகே தளவாய்புரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்(55). இவர் செட்டிக்குளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வெள்ளிச்சந்தைக்கு சென்று மருந்து வாங்கிவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பைக் ராஜ்குமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர்...
ஆற்றூரில் நேரு பிறந்த நாள் விழா
கருங்கல், நவ.15 : ஆற்றூர் சந்திப்பில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராஜீவ் காந்தி சிலை முன் நேருவின் திருவுருவ படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமை வகித்தார்....
புதுக்கடை அருகே அனுமதியின்றி பாறை உடைப்பு பொக்லைன் இயந்திரம் பறிமுதல்
புதுக்கடை, நவ. 13: புதுக்கடை அருகே தும்பாலி பகுதியை சேர்ந்தவர் ஜாண் கிறிஸ்டோபர். இவரது நிலத்திலிருந்து உரிய அனுமதியின்றி பாறைகள் உடைப்பதாக, குன்னத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பூபதி கண்ணன் என்பவருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக கிராம அலுவலர் சம்பவ இடத்திற்கு சென்றார். அப்போது அங்கு பாறைகளை உடைத்து கொண்டிருந்தவர்கள், கிராம நிர்வாக அலுவலரை கண்டவுடன்...
வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பில் ஊழல் விழிப்புணர்வு போட்டிகள்
நாகர்கோவில், நவ. 13: நாகர் கோவிலில் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில் நடந்த ஊழல் விழிப்புணர்வு வார விழாவின் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. நாகர்கோவிலில் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில், விழிப்புணர்வு அனைவரின் கூட்டு பொறுப்பு என்ற தலைப்பில், ஊழல் விழிப்புணர்வு வார விழாவின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியின்...
பைங்குளத்தில் டீக்கடை உரிமையாளர் மீது தாக்குதல்
புதுக்கடை, நவ.13 : புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (60). இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த அஜின் (30) என்பவர் ரவீந்திரன் கடையில் சென்று பொருட்கள் கேட்டுள்ளார். அப்போது ரவீந்திரன் அதற்கான பணத்தை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜின் வீட்டிற்கு சென்று ஒரு கம்பை...
கன்னியாகுமரி அருகே தூக்குப்போட்டு தொங்கிய கயிறு அறுந்தும் உயிர் இழந்த முதியவர்
கன்னியாகுமரி, நவ.12: கன்னியாகுமரி அருகே பாலசுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (63). இவர் மது அருந்தி விட்டு அடிக்கடி மனைவியிடம் சண்டை போடுவது வழக்கமாம். இந்நிலையில், நேற்று முன்தினமும் மது அருந்தி விட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த மனைவி வீட்டின் மேல்தளத்தில் வசிக்கும் மகன் கந்தன் (36) வீட்டிற்கு சென்று இரவு தங்கி உள்ளார்....
விளவங்கோடு தொகுதியில் பழுதான சாலைகளை தாரகை கத்பர்ட் எம்எல்ஏ ஆய்வு
மார்த்தாண்டம், நவ.12: விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் பல சாலைகள் மோசமாக காணப்படுகின்றன. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக உத்திரங்கோடு முதல் மஞ்சாலுமூடு, மெதப்பங்கோடு முதல் கைதகம், மஞ்சாலுமூடு முதல் அருமனை, அருமனை முதல் பனச்சமூடு வரையிலான சாலைகள் மிகவும் மோசமாக காணப்படுகின்றன. இந்த சாலைகளை தாரகை கத்பர்ட்...
மார்த்தாண்டம் அருகே பெண்ைண அவதூறாக பேசியவர் கைது
மார்த்தாண்டம், நவ.12: வேர்க்கிளம்பி அருகே பூவன்கோடு வலியபிலாவிளையை சேர்ந்தவர் ஷெர்லின் செல்வசிங். இவரது மனைவி ஜெயந்தி (43). இவர்கள் தற்போது மார்த்தாண்டம் அருகே ஐரேனிபுரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்தநிலையில், அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான ரோஸ்லின் (45) என்பவர் ஜெயந்தியின் வீட்டு காம்பவுண்டுக்குள் அத்துமீறி நுழைந்து தகராறில்...
குமரியில் காலநிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவல்
நாகர்கோவில், நவ. 11: குமரியில் வெயில், மழை மற்றும் குளிர் காரணமாக காய்ச்சல் பரவி வருகிறது. குமரியில் கடந்த சில நாட்களாக கடும் வெயிலும், வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் மழையும் பெய்து வருகிறது. மேலும், கடந்த இரு நாட்களாக கடும் குளிரும் இரவில் காணப்படுகிறது. இதுபோன்ற மாறுபட்ட காலநிலை காரணமாக தலைவலி, இருமல், உடல்...


