பாட்னா: பீகாரில் ஜாதி வாரியான கணக்கெடுக்கும் பணி முடிந்து விரைவில் அது பற்றிய தகவல்கள் வெளியிடப்படும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறினார். இதுகுறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று கூறுகையில்,‘‘ பீகார் மாநிலத்தில் ஜாதிவாரியான கணக்கெடுப்பு முடிந்து விட்டது. தற்போது அனைத்து தரவுகள் தொகுக்கப்பட்டு வருகிறது.
விரைவில், ஜாதி வாரியான புள்ளிவிவரங்கள் அறிவிக்கப்படும். இந்த கணக்கெடுப்பு பணி அனைவருக்கும் பயன்தருவதாகும். புள்ளிவிவரங்களின் மூலம் ஏழைகள் உள்பட சமூகத்தின் பல்வேறு பிரிவு மக்களின் வளர்ச்சிக்கு திட்டங்கள் வகுக்க முடியும். இதன் மூலம் எந்தெந்த பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது தெரியவரும்’’என்றார்.