Wednesday, May 29, 2024
Home » தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்

by Ranjith

கொல்கத்தா: தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ப.சிதம்பரம் அளித்த நேர்காணலில், “இடஒதுக்கீட்டின் பயன்கள் அனைவரையும் முழுமையாக சென்று சேர சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியம்.

கர்நாடாக, பீகார் மாநிலங்கள் ஏற்கனவே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்து விட்டன. சட்டீஸ்கர், ஒடிசா, ஆந்திரா அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த போவதாக தெரிவித்துள்ளன. இது மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும். தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும். கடந்த 2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்தவில்லை.

மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநிலங்கள் செய்ய முடியாது என்பதால் இந்த மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துகின்றன. 2023ம் ஆண்டு முடிய போகிறது. 2024 மக்களவை தேர்தலுக்கு முன் ஒன்றிய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாது. 2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பும், சாதிவாரி கணக்கெடுப்பும் ஒரேநேரத்தில் நடத்தப்படும் என காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது” என்று தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

four − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi