சென்னை: தமிழ்நாட்டில் 117 நகரங்களுக்கு புறவழிச்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3ம் நாள் அமர்வு தொடங்கியது. சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில் கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடிக்கு புறவழிச்சாலை அமைப்பது குறித்த உறுப்பினர் சின்னதுரை கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது, கறம்பக்குடிக்கு “உங்கள் தொகுதியில் முதல்வர்” திட்டம் மூலம் புறவழிச் சாலை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. 32 இடங்களில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கந்தர்வக்கோட்டையில் இருந்து அம்புக்கோயில் செல்லும் 15.6 கிலோமீட்டர் நீள சாலையை அகலப்படுத்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது இவ்வாறு கூறினார்.