காரியாபட்டி, நவ.9: காரியாபட்டி அருகே பி.புதுப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஜெயராணி தலைமை வகித்தார். காரியாபட்டி போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் சமீலா பேகம் மரக்கன்றுகளை நட்டுவைத்தார். ஆசிரியர் பொன்ராம் மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் குருசாமி, முத்துச்சாமி, ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்றனர்.