டெல்லி: டெல்லியில் உள்ள ஒன்றிய உள்துறை அமைச்சக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவருக்கு அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நார்த் பிளாக்கில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் டெல்லி போலீஸ் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படாததை அடுத்து, மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது.