புதுடெல்லி: அரியானா மாநிலம் ஹிசார் மக்களவை தொகுதி பாஜ எம்பி பிரிஜேந்திர சிங். இவர் நேற்று பாஜ கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் தனது டிவிட்டரில், ‘‘சில அரசியல் காரணங்களால் பாஜ கட்சியிலிருந்து விலகி உள்ளேன். கட்சியின் அடிப்படை பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளேன். மேலும், எம்பி பதவியையும் ராஜினாமா செய்துள்ளேன்’’ என தெரிவித்தார்.
உடனடியாக டெல்லியில் அவர் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் அவரை சந்தித்து காங்கிரசில் இணைந்தார். பின் பிரிஜேந்திர சிங் கூறுகையில், ‘‘அரசியல் நிர்பந்தம் காரணமாக சில காலமாக அமைதியின்றி இருந்தேன். விவசாயிகள் பிரச்னை, அக்னிபாதை திட்டம், மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு போன்ற விவகாரங்களில் பாஜவுடன் என்னால் உடன்பட முடியவில்லை. இதனால் காங்கிரசில் இணைந்துள்ளேன்’’ என்றார்.