சென்னை: மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தின் தற்போதைய நீர்இருப்பு மற்றும் நீர்வரத்தை கருத்தில் கொண்டு நடப்பாண்டிற்கான (2023-2024) முன்னுரிமை பகுதியான 1-வது மற்றும் 2-வது ரீச்சுகளை சார்ந்த மறைமுக பாசன நிலங்களுக்கும் மற்றும் அணையில் முழு கொள்ளளவு உள்ளதால், 3-வது, 4-வது ரீச்சுகளை சார்ந்த மறைமுக பாசன நிலங்களுக்கும் 10.01.2024 முதல் 31.03.2024 முடிய 82 நாட்கள் பிசான பருவ சாகுபடி செய்வதற்காக மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 23,152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்துள்ளனர்.