திருப்போரூர்: நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்ட தொடக்க விழாவிற்கு வருகை புரிந்த முதல்வருக்கு, திருப்போரூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்ட தொடக்க விழாவிற்கு, நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோரை திருப்போரூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் வரவேற்கும் நிகழ்ச்சி நெம்மேலியில் நடைபெற்றது.
இதில் ஒன்றியக்குழு தலைவர் எல்.இதயவர்மன், துணைத் தலைவர் சத்யா சேகர், தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பையனூர் சேகர் ஆகியோர் கலந்துகொண்டு, முதல்வருக்கு நினைவுப்பரிசு, புத்தகம் வழங்கினர். நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.