பொள்ளாச்சி, ஏப். 25: பொள்ளாச்சி பாலக்காடுரோடு காந்தி நகரை சேர்ந்தவர் அர்ஜூன்(27), சக்திகணேஷ்(20), சர்ச் காலனியை சேர்ந்தவர் சதீஸ்குமார்(18). இவர்கள் மூவரும் நேற்று, ஆழியாற்றில் குளித்துவிட்டு பைக்கில் ஒன்றாக வீடு திரும்பினர். பைக்கை அர்ஜூன் ஓட்டி வந்தார். சோத்துபாறைசித்தூர், பம்ப் கவுஸ் அருகே வளைவில் வரும்போது, மண்பாங்கான இடத்தில் பைக் கட்டுபாட்டை இழந்து கீழே விழுந்தது. பைக்கிலிருந்து விழந்த அர்ஜூன் மற்றும் சதீஸ்குமார், சக்திகணேஷ் ஆகியோர் காயமடைந்தனர். இதையறிந்த அப்பகுதியினர் அவர்களை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த சக்திகணேஷ், மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார்.