கவுகாத்தி: ஒரு லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில்கள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கு அக்டோபர் 2ம் தேதி முதல் தடை விதிப்பதற்கு அசாம் அரசு முடிவு செய்துள்ளது. அசாம் அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில்,‘‘அசாம் முழுவதும் ஒரு லிட்டருக்கும் குறைவான தண்ணீர்பாட்டில்கள் உற்பத்தி செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 2ம் தேதி முதல் இந்த தடை உத்தரவு அமலுக்கு வரும். 2024ம் ஆண்டு அக்டோபர் முதல் 2லிட்டருக்கும் குறைவான தண்ணீர்பாட்டில்களும் தடை செய்யப்படும். ” என்றார்.