கன்னியாகுமரி: பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருவதை ஒட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 7 கடற்கரை கிராமங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் கடலுக்கு செல்லவில்லை. சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிரதமர் வருகை எதிரொலி: குமரியில் மீன் பிடிக்க தடை
previous post