Saturday, July 27, 2024
Home » புதுகை அருகே பயங்கரம்: பச்சிளம் குழந்தை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை

புதுகை அருகே பயங்கரம்: பச்சிளம் குழந்தை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை

by Neethimaan


திருமயம்:புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டி அருகேயுள்ள கரையப்பட்டியை சேர்ந்தவர் மோகன்(34). விவசாயி. இவரது முதல் மனைவி உடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மோகன் ராஜ் கடந்த ஓராண்டுக்கு முன் அறந்தாங்கி அருகேயுள்ள வைரிவயல் கிராமத்தை சேர்ந்த கிருத்திகா(எ) செண்பகவல்லி(26) என்பவரை 2 வதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு கடந்த 40 நாட்களுக்கு முன் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. நேற்றுமுன்தினம் மோகன் ராஜ் தனது வீட்டின் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தார். அறையில் இருந்த தொட்டிலில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. கிருத்திகா வீட்டில் இருந்த கழிவறைக்கு சென்றிருந்தார்.

பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது தொட்டிலில் இருந்த குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் குழந்தையை தேடினர். அப்போது வீட்டு மாடியில் உள்ள சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியில் குழந்தை கிடந்தது. இதையடுத்து குழந்தையை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

thirteen + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi