சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பற்றி அவதூறாக பேசிய வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுருவுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. பொதுக்கூட்டம் கூட்டி மன்னிப்பு கோரிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுருவுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர், அமைச்சர் பற்றி அவதூறாக பேசியதாக குமரகுரு மீது வழக்கு தொடரப்பட்டது.