சென்னை: திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கடந்த முறை திருச்சி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில் இந்த முறை மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.