சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு பெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்தும் மாவட்ட செயலாளர்களுடன் விவாதித்தாக தகவல் வெளியாகியுள்ளது.