பூந்தமல்லி :சென்னை போரூர் அருகே ஐய்யப்பன்தாங்கலில் ஓம்காளி பகவதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஓம்காளி அன்பரசு சுவாமிகள், கடந்த 20 ஆண்டுகளாக குறி சொல்லி வருகிறார். முக்கிய நிகழ்வுகள், அரசியல் நிலவரம் குறித்தும் அவ்வப்போதுஅருள்வாக்கு கூறி பரபரப்பை ஏற்படுத்துவார்.கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக வெற்றிப் பெறும். மத்தியில் பாஜ வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார். 2020ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றிப்பெறும் என்று கணித்து கூறினார்.
…