கோவை: கொரோனா கட்டுப்பாட்டுவிதி மீறி படப்பிடிப்பு நடத்தியதாக சிவகார்த்திகேயன் படக்குழுவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி ஆனைமலையில் படப்பிடிப்பு நடத்தியதால் வருவாய்த்துறை ரூ.19,400 அபராதம் விதித்துள்ளது. டான் படத்தின் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி உள்பட 30 பேர் மீது ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். …