சென்னை: பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்குவதைத் தடுக்கும் வகையில், இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.”பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கும் நடைமுறையை ஒழிக்க முயற்சி எடுக்க வேண்டும். மனிதர்கள் இறங்குவதை தவிர்த்து இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும். மனிதர்களை இறக்க தடை விதிக்கும் 2013ம் ஆண்டு சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். பாதாள சாக்கடைகளில் இறங்கி உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிகரிக்க வேண்டும்” என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.