சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள ஜெயா கல்வி குழுமத்தின் பாலலோக் ஸ்கூல் ஆஃப் எக்சலன்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் ”என் ஓட்டு என் உரிமை” எனும் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கல்வி குழும தலைவர் பேராசிரியர் ஏ.கனகராஜ் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் க.நவராஜ், துணைச் செயலாளர் க.தீனா, இயக்குனர் எஸ்.கருணாகரன் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் எஸ்.முத்துராஜ் வரவேற்றார். பேரணியில் ”100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், உங்கள் வாக்கு உங்கள் உரிமை, என் ஓட்டு என் உரிமை” போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியபடி பள்ளி மாணவர்கள் சென்றனர். இதன் மூலம் அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தினை அறிந்து கொண்டதாக தெரிவித்தனர்.