சென்னை: ஸ்ரீவெங்கடேஸ்வரா சுவாமி கோயிலுக்கு கூடுதல் நிலம் வாங்குவதற்காக ஜிஆர்டி குழுமம் சார்பில் ரூ.1 கோடிக்கான காசோலை தேவஸ்தான குழுத் தலைவர் சேகர் ரெட்டியிடம் வழங்கப்பட்டது. ஜிஆர்டி குழுமத் தலைவர் ராஜேந்திரன் புதன்கிழமை சென்னையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, திருமலை திருப்பதி தேவஸ்தானங்களின் குழுத் தலைவர் சேகர் ரெட்டியிடம் ₹1 கோடிக்கான காசோலையை வழங்கி உள்ளார்.
இது சென்னை தி.நகர் வெங்கடேஸ்வரா சுவாமி கோயிலின் கூடுதல் நிலம் வாங்குவதற்கான நிதியில் சேர்க்கப்பட உள்ளது. மேலும் இதில் பெறப்படும் நிதி மூலம் கூடுதல் நிலம் வாங்குவது, மக்கள் தங்குவதற்கு வசதியை மேம்படுத்துவது, பக்தர்களுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும். காசோலை வழங்கும் போது ஜிஆர்டி குழுமத்தின் இயக்குநர்கள் ஜி.ஆர்.அனந்த பத்மநாபன், ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.