முத்துப்பேட்டை, ஏப். 10: முத்துப்பேட்டை பகுதி அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பண்பாடு மற்றும் விளையாட்டு வார விழா போட்டிகள் பல்வேறு தலைப்புகளில் நடைபெற்றது. இதில் முத்துப்பேட்டை அடுத்த கீழப்பெருமழை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்கள் வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கு பெற்று வென்றுள்ளனர்.
இதில் பலகுரல் போட்டியில் 5ம் வகுப்பு மாணவன் நவின்ராஜ் முதலிடத்தையும், ஓவியப் போட்டியில் 5ம் மாணவி செஸிகா 2ம் இடத்தையும் கருவி இசை இசைத்தல் போட்டியில் 4ம் வகுப்பு மாணவன் ஹரிஷ் 3ம் இடத்தையும், குழு நடன போட்டியில் மோனிஸ்வரன், ஸ்ரீராம், சிவரூபன், தரனிஷ், நவின்ராஜ், விவாஸ், சாய்ராகேஷ், ஹரிஷ் ஆகியோர் 3ம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார வளமைய மூலம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
பலகுரல் போட்டியில் இப்பள்ளி 5ம் வகுப்பு மாணவன் நவின்ராஜ் மாவட்ட அளவில் 3ம் இடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடதக்கது. இந்தநிலையில் வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் செந்தமிழ்ச்செல்வி, ஆசிரியர் விஜயகுமாரன், ஆசிரியை நந்தினி மற்றும் பள்ளி மேலாண்மை குழு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.