மதுரை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாகக் கூறி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கோவில் விழாவின் ஒரு பகுதிதான் ஜல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கும் தேர்தல் விதிமுறைக்கும் தொடர்பு இல்லை என சிவகங்கை மாவட்டம் கோட்டூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்து நாளைக்குள் உத்தரவு பிறப்பிக்க ஆணையிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாகக் கூறி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
previous post