திருவாடானை, மார்ச்15: திருவாடானை அருகே ஆதியா குடி கிராமம் உள்ளது. இந்த ஊருக்கு திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிவு சாலை செல்கிறது. இச்சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டதால் மிகவும் மோசமாக ஜல்லிக்கட்டு அனைத்தும் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் வாகனங்கள் போக முடியாமல் கிராம பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே இந்த சாலையை விரைவில் சீரமைத்து தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆதியாகுடி கிராம மக்கள் கூறுகையில், இந்த சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டது. ஜல்லிக்கட்டில் அனைத்தும் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. அவசர சிகிச்சைக்கு ஆட்டோவை அழைத்தால் கூட வர மறுக்கின்றனர். சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவு உள்ள இந்த சாலையை நம்பி 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இந்த சாலையை விரைவில் சீரமைத்து தர வேண்டும் என்றனர்.